முகப்பு
சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு
இந்தியா

சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு

விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

இந்தியா

சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு

விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு
பகிர்:


புது தில்லி: சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

தில்லி காற்று மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விழிப்புணர்வால் ஏற்படும் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பி, இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா தில்லி அரசிடம் கூறியிருந்த நிலையில், இந்தக் கோப்புகள் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வால், ஏற்படும் மாற்றம் குறித்த ஆதாரங்களை இணைத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 40 நகரங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →