இந்தியா

குறையும் கரோனா! நாட்டில் இன்றைய பாதிப்பு நிலவரம்

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,168 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 7,946 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 59,210 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது. 

மேலும், 58  பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,932 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 9,685 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,55,365 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,12,52,83,259 (212.75 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 22,40,162 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாளை தவெக நிர்வாகக் குழு கூட்டம்!

துறைமுகத்தில் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு! பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் மக்கள்!

காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ராஜாவை தூக்கி எறிந்த ஹிகாருவுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்!

SCROLL FOR NEXT