FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாஜக அமைச்சரை தரக்குறைவாகப் பேசிய ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 செப்டம்பர் 2022, 4:44 pm IST
கோபால் இத்தாலியா
பகிர்:

குஜராத் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சரை தரக்குறைவாகப் பேசியதற்காக ஆம் ஆத்மி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இத்தாலியா அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியாவை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில், பேரணியில் பாஜக தலைவர் சிஆர் பாட்டீலை ‘முன்னாள் கொள்ளைக்காரன்’ என்றும் அமைச்சரை ‘போதைப்பொருள் சங்கவி’ என கோபால் இத்தாலியா பேசினார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோபால் மீது  பிரிவு 469, 500(அவதூறு செய்ததற்கான தண்டனை) 504, 505(1)பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments