காங்கிரஸின் நடைப்பயணத்தை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் இன்று தொடங்கவுள்ளது.
இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறியதாவது:
மத்திய அரசுக்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைப்பதையே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரை பிரதிபலிக்கிறது. இந்த நடைப்பயணத்தை கண்டு பாஜக அச்சமடைந்துள்ளது என்றார்.
கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் யாத்திரையானது ராகுல் காந்தி தலைமையில் 150 நாள்கள் 12 மாநிலங்கள் 3,600 கி.மீ. கடந்து செல்கின்றனர்.