இந்தியா

கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே குண்டு வெடிப்பு

DIN

கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மட்டனூர் போலீசார் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தொண்டரான சுதீஷ் என்பவரது வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வியாழக்கிழமை இரவு வெடிகுண்டு வெடித்தது. நிகழ்விடத்துக்கு வந்த தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்தனர். 

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை தலைவரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சுதீஷ் மீது பல வழக்குகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே மற்றொரு சம்பவத்தில், கண்ணவத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தொண்டர் சலாவுதீன் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்தது. இதுகுறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT