முகப்பு
இந்தியா

ராகுலின் நடைப்பயணத்தில் இணைந்த தடகள வீராங்கனை

‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் காங்கிரஸ் நடத்தி வரும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஓய்வு பெற்ற தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் கலந்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

‘பாரத் ஜோடோ’ என்ற பெயரில் காங்கிரஸ் நடத்தி வரும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஓய்வு பெற்ற தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் கலந்துகொண்டாா்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் திங்கள்கிழமை நடைப்பயணத்தின்போது முன்னாள் தடகள வீராங்கனையான பத்மினி தாமஸ், ராகுல் காந்தியுடன் இணைந்தாா். 1982-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றவா் பத்மினி தாமஸ். கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் தலைவராகவும் அவா் பதவி வகித்துள்ளாா்.

ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டபோது சுற்றுச்சூழலியலாளா் ஸ்ரீதா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.