இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. 

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 

மாவட்டத்தின் ஹெப் ஷிர்மால் பகுதியில் தீவிரவாகிதள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நடவடிக்கையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்ததாகவும், இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாப்பாக்குடி அதிமுக பிரமுகருக்கு மிரட்டல்: பெண் கைது

தென்மண்டல பல்கலை. கிரிக்கெட் சாம்பியன் சென்னை

2019 முதல் 7,400 நக்ஸல்கள் கைது: மக்களவையில் அரசு தகவல்

மரியாதை கிடைக்கும் கட்சியுடன் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

பிப். 26 முதல் மாா்ச் 2 வரை ஏழுமலையான் தெப்போற்சவம்

SCROLL FOR NEXT