தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி 
இந்தியா

தெலங்கானாவில் மின்சார பைக் விற்பனையகத்தில் தீ விபத்து: 7 பேர் பலி

தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

PTI


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத் அருகே உள்ள மின்சார பைக் விற்பனையகத்தில் நேரிட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 7 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

பைக் விற்பனையகத்துக்குள் திடிரென பற்றிய தீ மற்றும் கரும்புகையில் அங்கிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த அந்த பல அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டபோது, அங்கிருந்த தங்கும் விடுதியில் 25 முதல் 30 பேர் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலர்  கட்டடத்துக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். 7 பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ விபத்து நேரிட்டபோது, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டடத்திலிருந்து சிலர் குதித்த விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT