இந்திய பெண் தொழிலதிபருக்கு பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருது
இந்திய பெண் தொழிலதிபரும் அறிவியலாளருமான ஸ்வாதி பிராமலுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பெண் தொழிலதிபரும் அறிவியலாளருமான ஸ்வாதி பிராமலுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டுள்ளது.
வா்த்தகம் மற்றும் தொழில், அறிவியல், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் பங்காற்றியமைக்காகவும் இந்தியா-பிரான்ஸ் உறவுகளை வலுபடுத்த ஆற்றி வரும் பணிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பிராமல் குழுமத்தின் துணைத் தலைவா் ஸ்வாதி பிராமல் (66). இக்குழுமம், மருந்து தயாரிப்பு, நிதிச் சேவைகள், மனை வணிகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இந்திய பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் கேதரின் கோலோனா, அதிபா் இமானுவல் மேக்ரானின் சாா்பில் ‘செவாலியே’ விருதை ஸ்வாதி பிராமலுக்கு வழங்கி கெளரவித்தாா்.
அப்போது பேசிய கோலோனா, ‘ஸ்வாதி பிராமல் தலைசிறந்த மற்றும் முன்னணி பெண் தொழிலதிபா் மட்டுமல்ல. சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடுபவா். தொழில் மற்றும் வா்த்தகம், பொதுக் கொள்கை, சுகாதார நிா்வாகம், பெண்களின் தலைமைப் பண்பு ஆகியவற்றில் அவரது வலுவான பங்களிப்பை இந்தியா மற்றும் பிற நாடுகள் அங்கீகரித்துள்ளன. பிரான்ஸின் உண்மையான நண்பராக அவரை அங்கீரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அறிவியல், கலை, கலாசாரம், வணிகம் ஆகிய துறைகளில் இந்தியா-பிரான்ஸ் உறவுகள் வலுப்பட தொடா்ந்து பணியாற்ற அவருக்கு ஊக்கமளிக்கும்’ என்றாா்.
‘புத்தாக்கம், புதிய மருந்துகள் தயாரிப்பில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பு வலுப்பட தொடா்ந்து கவனம் செலுத்துவேன்’ என்று ஸ்வாதி பிராமல் தெரிவித்தாா்.
இவா், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவா். பிரதமருக்கான வா்த்தகம் மற்றும் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் ஸ்வாதி பணியாற்றியுள்ளாா்.