கோப்புப் படம் 
இந்தியா

சோனாலி போகாட் வழக்கு: கோவா விடுதிக்கு விரைந்தனர் சிபிஐ

சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 

DIN

சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலை வழக்கு சமீபத்தில் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

ஆகஸ்ட் 22-ஆம் தேதி கோவா விடுதியில் விருந்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனாலி போகாட் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், சோனாலி போகாட்டுடன் வந்த இரண்டு உதவியாளா்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனா். அவா்கள் சோனாலி போகாட்டுக்கு அன்று இரவு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த சிசிடிவி விடியோ பதிவையும் கோவா போலீஸாா் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனா்.

செப்.15 முதல் இந்த வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது, சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த அன்ஜுனா கடற்கரையிலுள்ள கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT