முகப்பு
இந்தியா

குஜராத்: 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை தீா்ப்புகள்

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
பகிர்:

குஜராத் மாநில விசாரணை நீதிமன்றங்களில் 2006 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளில் 46 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீா்ப்புகள் வெளியாகி உள்ளன.

2002 அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 56 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்தது.

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் கொலை வழக்குகளில் போக்ஸோ சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வழங்கியுள்ளன. ஆணவக் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2021 வரை அதிகபட்சமாக 4 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. விதிவிலக்காக, கடந்த 2011-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 13 பேரில் 11 போ் 2002, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்குடன் தொடா்புடையவா்கள்.

2021-ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து குஜராத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஒருவா் கூறுகையில், ‘அரிதினும் அரிதான வழக்கு எனக் கருதப்படும் வழக்குகளில் மட்டுமே உயா்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறது. பிற தூக்கு தண்டனை வழக்குகளில் தண்டனை குறைப்பு செய்யப்படுகிறது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →