இந்தியா

புடவையுடன் கால்பந்து விளையாடிய திரிணமூல் எம்.பி.! வைரலாகும் படங்கள்

DIN

மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.     மஹுவா மொய்த்ரா புடவையுடன் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

பின்னர் போட்டி நடைபெறும் திடலில் இறங்கி, புடவையுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். மேலும், புடவையுடன் ஷூ அணிந்து கால்பந்தை உதைக்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

கிருஷ்ணாநகர் எம்.பி. கால்பந்துப்போட்டி 2022 இறுதி நிகழ்ச்சியின் மகிழ்ச்சியான தருணங்கள் எனக் குறிப்பிட்டு, ஆம். நான் புடவை அணிந்து கால்பந்து விளையாடுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT