இந்தியா

வேலை வழங்குவதாக போலி நேர்முகத்தேர்வுகள்! எச்சரிக்கும் ஜெட் ஏர்வேஸ்

வேலை வழங்குவதாகக் கூறி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் பணம் சிலர் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 

DIN

வேலை வழங்குவதாகக் கூறி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் பணம் சிலர் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்காக எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை என்றும், இதனால், வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சில மர்ம நபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் பணி வாய்ப்புக்காக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர். 

பணியிடங்களை நிரப்புவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வர்களிடம் பணம் பெறுவதில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியிடங்கள் குறித்து அறிந்துகொள்ள ஜெட் கேரியர்ஸ் (JetCareers) என்ற இணையப் பக்கத்தை பின்தொடரலாம். ஜெட் ஏர்வேஸ் பணியிடங்கள் குறித்து சமூகவலைதளத்தில் அல்லது மின்னஞ்சல்களில் வரும் அறிவிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT