இந்தியா

கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி!

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். 

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல் காந்தியின் இந்த நடைப் பயணத்தை தேசியக் கொடி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் பயணம் நிறைவடைந்த நிலையில் தற்போது கேரளத்தில் உள்ளார். 

13 ஆவது நாளான இன்று அவர், கேரளத்தில் ஆலப்புழாவில் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து வருகிறார். 

கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 15 கிமீ பயணம் மேற்கொள்கிறார். 

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் 3,600 கி.மீ. நடைப்பயணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT