முகப்பு
இந்தியா

தாணே சாலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.14.06 லட்சம் இழப்பீடு வழங்கத் தீர்ப்பாயம் உத்தரவு! 

2017ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.14.06 லட்சம் இழப்பீடு வழங்க தாணே மோட்டர் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

2017ஆம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.14.06 லட்சம் இழப்பீடு வழங்க தாணே மோட்டர் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தீர்ப்பாய உறுப்பினர் எச்.எம்.போசலே, பிறப்பித்த உத்தரவில், 

குற்றம் சாட்டப்பட்ட ஜீப்பின் உரிமையாளருக்கும் அதன் ஓட்டுநருக்கும் உரிமைகோரலைத் தாக்கல் செய்த நாளிலிருந்து ஆண்டுக்கு 8 சதவீத வட்டியுடன் கூட்டாகவும் தனியாகவும் செலுத்துமாறு உத்தரவிட்டார். 

27 வயது சுனில் அண்டை நாடான பால்கர் மாவட்டத்தில் உள்ள தில்சேயிலிருந்து வாதாவுக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோன்சிவ் கிராமம் அருகே சுனில் சென்ற வாகனம் மீது எதிர் திசையிலிருந்து வேகமாக வந்த மற்றொரு ஜீப் மோதியது.

இரண்டு வாகனங்களுக்கு இடையே சுனில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தங்கள் மகன் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து மாதம் ரூ.12 ஆயிரம் சம்பாதிப்பதாகவும், அவரை நம்பி இருப்பதாகவும் தீர்ப்பாயத்தில் அவரது பெற்றோர் தெரிவித்தனர். 

இதையடுத்து, மனுதார்களுக்கு ரூ.14.06 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தாணே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →