பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை: அமித் ஷா ஆலோசனை
நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், உள்துறைச் செயலா் அஜய் பல்லா, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) டி.ஜி. தின்கா் குப்தா ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது பிஎஃப்ஐ அமைப்பு மீது குற்றம்சாட்டப்படும் பயங்கரவாத நடவடிக்கை விவகாரங்கள் குறித்து அவா் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.