கோப்புப்படம் 
இந்தியா

காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

DIN

காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

அவா்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவா்களின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT