முகப்பு
இந்தியா

பறவை மீது விமானம் மோதல்: 135 பயணிகள் உயிர் தப்பினர்!

கோழிக்கோட்டிலிருந்து 135 பயணிகளுடன் தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால் விமானம் அவசரமாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

Updated On : 27 செப்டம்பர், 2022 at 1:09 PM
கோப்புப்படம்
பகிர்:

கோழிக்கோட்டிலிருந்து 135 பயணிகளுடன் தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால், ஒரு நாள் முன்னதாகவே கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

இதுகுறித்து ஏர் இந்தியா அதிகாரி கூறுகையில், 

ஏர் இந்தியா விமானத்திலிருந்த 135 பயணிகளில், சிலர் தங்கள் பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டு இண்டிகோ விமானத்தில் சென்றனர். மேலும், கண்ணூரில் உள்ள உணவகங்களில் தங்கியிருந்த சுமார் 85 பேர் தங்கள் பயணத்தை மீண்டும் திட்டமிட்டுள்ளனர். 

Advertisement

அதில் 24 பேர் பயணிகள், நேற்று மற்றும் இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் துபாய் மற்றும் பஹ்ரைனில் உள்ள அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். 

மீதமுள்ள 61 உள்நாட்டுப் பயணிகள் இங்கு உள்ளனர். விமானம் சரி செய்யப்பட்டவுடன் அவர்கள் அதே விமானத்தில் தில்லிக்கு அனுப்பப்படுவார்கள்.

தில்லியிலிருந்து 7 பொறியாளர்கள் இங்கு வந்ததாகவும், விமானத்தில் பறவை மோதிய இயந்திரங்களை ஆய்வு செய்து, சரிசெய்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

பழுதுபார்க்கும் பணி முடிந்ததும், விமானம் பறக்கத் தகுதியானதாகச் சான்றளிக்கப்பட்ட பின்னரே விமானம் புறப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.