புது தில்லி: நாட்டின் தேசியத் தலைநகரில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(நாளை) தொடக்கி வைக்கிறார்.
புதிய தொழில்நுட்பமானது தடையற்ற சேவை, அதிக தரவு வீதம், விரைவான செயல்பாடு மற்றும் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல், ஸ்பெக்ட்ரம் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.
IMC 2022 ஆனது "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளின் கீழ் சனிக்கிழமை முதல் அக்டோபர் 4 வரை இயங்கும்.
தில்லி பிரகதி திடலில் நடைபெறும் விழாவில் இந்திய மொபைல் காங்கிரஸின் 6 வது பதிப்பையும் பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.