ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை: ஜோ பைடன் அறிவிப்பு
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்பாக அறியப்படுகிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது.
இதையும் படிக்க | ‘கஜகஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை’: மத்திய அரசு
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். நேற்று இரவு மேற்கு சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.