முகப்பு
இந்தியா

இந்திய விமானப் படையின் முதல் பெண் போா் விமானி அபிலாஷா பாரக்

இந்திய விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புது தில்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாசிக்கில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 36 விமானப் படை விமானிகளுடன் அபிலாஷா பாரக்கிற்கு விமானி பட்டம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவின் போா் விமானத்தின் பெண் விமானி என்ற பெருமையை அபிலாஷா பாரக் பெற்றுள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த அபிலாஷா பாரக், கடந்த 2018, செப்டம்பா் மாதம் விமானப் படையில் சோ்ந்தாா். இவா், ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி கா்னல் எஸ். ஓம் சிங்கின் மகள் ஆவாா்.

முழு கட்டுரையைப் படிக்க →