முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளால் புதைக்கப்பட்டதாக வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளால் புதைக்கப்பட்டதாக வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 

டோன்டோ பகுதியில் உள்ள ரெங்கரஹட்டு கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இறந்தவர் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சேதன் கொடா என்று அடையாளம் காணப்பட்டனர். விறகு சேகரிக்க அருகிலுள்ள காட்டிற்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பலத்த காயமடைந்தவர் அருகில் உள்ள சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சிஆர்பிஎஃப் மற்றும் ஜார்க்கண்ட் காவல்துறையினரின் மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை சமீபத்தில் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. மேலும், மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினருக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் முயற்சியில் வெடிகுண்டுகளை நிறுவியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →