முகப்பு
இந்தியா

நீரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

நீரவ்  மோடிக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2022 at 3:23 PM
நீரவ்  மோடி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:07 PM

நீரவ்  மோடிக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்த நீரவ் மோடி(51), இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றாா். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவா், அந்நாட்டுத் தலைநகா் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

வைர வியாபாரி நீரவ் மோடியை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், இன்று இந்தியாவில் நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான 39 சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.