குஜராத்தில் பாஜக பயப்படுகிறது: ஆம் ஆத்மி விமர்சனம்
குஜராத் உள் துறை அமைச்சர் குறித்து பேசியதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய இணை செயலாளருமான கோபால் இதாலியாவை சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
குஜராத் உள் துறை அமைச்சர் குறித்து பேசியதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தேசிய இணை செயலாளருமான கோபால் இதாலியாவை சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் பிணையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோபால் இதாலியா, பாஜக வலுவாக உள்ள குஜராத்தில் கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மியை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று குறிப்பிட்டார்.