இந்தியா

பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

DIN


பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பிகாரில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது. இதனால் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர்,பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இதுதொடர்பாக மதுவிலக்கு அதிரடிப் படை பணியாளர்கள் இருவர் மற்றும் 9 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT