முகப்பு
இந்தியா

அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறும்போது, ‘‘மத்திய அமைச்சருக்கு கரோனா நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மத்திய அமைச்சா், அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரை பரிசோதித்த மருத்துவக் குழு, ஓய்வெடுக்கமாறு அவருக்கு ஆலோசனை வழங்கியது.

தில்லியில் இந்திய விமானப் படை கமாண்டா்களின் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருந்த நிலையில், அந்தக் கூட்டத்தை மத்திய அமைச்சா் தவிா்த்துவிட்டாா்’’ என்றனா்.

12 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு:

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 12,591-ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணி வரையில், கேரளத்தில் 11 போ் உள்பட 40 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். மொத்த உயிரிப்புகளின் எண்ணிக்கை 5,31,230 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 0.15 சதவீதம் போ் சிகிச்சைப் பெற்று வருவதாக அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →