முகப்பு
இந்தியா

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: கேஜரிவால் குற்றச்சாட்டு!

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதில் பெண் ஒருவர் காயமடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கேஜரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில், 

தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

இந்த சம்பவத்தை அடுத்து, தலைநகர் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறித்து வழக்குரைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →