இந்தியா

வந்தே பாரத் ரயிலில் எம்பி படத்தை ஒட்டிய காங். தொண்டர்கள்!

வந்தே பாரத் ரயிலின் ஜன்னல்களில், பாலக்காடு எம்பி  ஸ்ரீகாந்தனின் புகைப்படம் உள்ள போஸ்டரை காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

வந்தே பாரத் ரயிலின் ஜன்னல்களில், பாலக்காடு எம்பி  ஸ்ரீகாந்தனின் புகைப்படம் உள்ள போஸ்டரை காங்கிரஸ் தொண்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து நேற்று காலை தொடங்கிவைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே 586 கி.மீ. தூரம் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ரயில் நேற்று பாலக்காடு மாவட்டம் சொர்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ரயிலை வரவேற்க நின்றிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் எம்பியின் புகைப்படம் உள்ள போஸ்டரை ரயிலின் ஜன்னல்களில் ஒட்டினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT