முகப்பு
இந்தியா

அனைத்தும் சரியான திசையில் செல்கிறது: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராஜஸ்தான் முதல்வர் 

ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
பகிர்:

ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாசிச சக்திகளின் கீழ், நாட்டில் ஒரு கவலையான போக்கு உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு அவதூறு வழக்குகளில் கூட இரண்டு ஆண்டுகள் முழுத் தண்டனை பெற்ற முதல் நபர் ராகுல் காந்திதான். இன்று, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இப்போது எல்லாம் சரியான திசையில் செல்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்’’ என்றார்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

மேலும் எதன் அடிப்படையில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பது குறித்து கீழமை நீதிமன்றங்கள் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் மூலமாக ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் தொடர்வார். 

முழு கட்டுரையைப் படிக்க →