முகப்பு
இந்தியா

என் முகத்தைப் பார்க்க பிரதமர் மோடி விரும்பியிருக்க மாட்டார்; அதனால்..: ராகுல் காந்தி

தொலைக்காட்சியில் எனது முகத்தைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பியிருக்க மாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:


புது தில்லி: தொலைக்காட்சியில் எனது முகத்தைப் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பியிருக்க மாட்டார், ஆனால், எனது விடியோக்கள் குறித்து அவர் பேசுவார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த போது, ராகுல் காந்தி 37 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால், 14 நிமிடங்கள் மட்டுமே அவரது உரை மக்களவைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, ஒருவேளை, எனது முகத்தை தொலைக்காட்சியில் பார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லையோ, ஆனால் அவர் எனது விடியோக்களைப் பற்றி பேசுவார் என்று பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் என்னால் எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால், மக்களவைத் தொலைக்காட்சியையும், ஊடகத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராவாரா? இல்லையா? என்பது அல்ல கேள்வி, மணிப்பூரில் குழந்தைகளும் மக்களும் கொல்லப்பட்டதுதான் கேள்வி என்று ராகுல் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளில் பல கருவிகளை வைத்திருக்கிறார். ஆனால் மணிப்பூரில் கலவரத்தை ஒடுக்க அதில் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அவர் ஒன்றுமே செய்யாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →