ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்தது: வீரர் ஒருவர் பலி
ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார்.
ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஷாகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எஸ்கே.துபே என்கிற வீரர் நிகழ்விடத்திலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஜவஹர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான வீரரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு உடற்கூராய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.