கோப்புப் படம். 
இந்தியா

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்தது: வீரர் ஒருவர் பலி

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார். 

DIN

ராஜஸ்தானில் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் பலியானார்.
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஷாகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எஸ்கே.துபே என்கிற வீரர் நிகழ்விடத்திலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
மேலும் 16 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஜெய்சால்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்குள்ள ஜவஹர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
பலியான வீரரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு உடற்கூராய்வு மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா - 46 வெளியீடு எப்போது?

மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கானது: பிரதமர் மோடி

தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் விரோத பட்ஜெட்: மமதா பானர்ஜி

லாமின் யமால் ஆட்ட நாயகன்..! முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

SCROLL FOR NEXT