இந்தியா

ராஜஸ்தானில் ரூ.11 கோடியில் சைபர் கிரைம் விசாரணை மையம்: முதல்வர் ஒப்புதல்!

ராஜஸ்தான் காவலர் பயிற்சி அகாடெமியில் ரூ.11.73 கோடி செலவில் சைபர் கிரைம் விசாரனை மையம் அமைக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

ராஜஸ்தான் காவலர் பயிற்சி அகாடெமியில் ரூ.11.73 கோடி செலவில் சைபர் கிரைம் விசாரனை மையம் அமைக்க ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த புதிய சைபர் கிரைம் விசாரணை மையத்தில் காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்த சைபர் கிரைம் விசாரணை மையம் மத்திய விசாரணை அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து தேவையான தகவல் குறித்து கலந்தாலோசிக்கலாம். சைபர் கிரைம் விசாரணை மையத்துடன் ரூ.7.50 கோடி செலவில் 400 மீட்டர் நீளமுள்ள ஓட்டப்பந்தய டிராக்குகளும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டப் பந்த டிராக் அமைக்கும் திட்டத்தை 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் ஒரே துறை?

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: மக்கள் விரோதமானது! - மமதா

பட்ஜெட்டில் முக்கிய பிரச்னைகள் புறக்கணிப்பு: ராகுல்

பங்குச்சந்தை: 6 ஆண்டுகளில் மோசமான பட்ஜெட் நாள்! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் சரிவு!

தைப்பூசம்! பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அமைச்சர் சேகர்பாபு

SCROLL FOR NEXT