இந்தியா

ஹிமாசலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தின் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர். 

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தின் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 7 பேர் பலியாகினர். 

ஞாயிறு இரவு ஏற்பட்ட மேகவெடிப்பில் இரண்டு வீடுகள் அடித்துச்செல்லப்பட்டு, அதிலிருந்த 6 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை காணவில்லை. 

இறந்தவர்கள் ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹெம்லாட்டா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8) மற்றும் ரக்ஷா (12) என அடையாளம் காணப்பட்டனர் .

ஹிமாசலில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம் சிம்லாவில் சிவன் கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT