சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1: விண்ணில் ஏவத் தயார்!
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக் கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவத் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ள இந்த செயற்கைக் கோள், சூரியனை ஆய்வு செய்யவுள்ளது.
பெங்களூருவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு செயற்கைக் கோள் வந்தடைந்ததாகவும், இந்த செயற்கைகோளானது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் இறுதியில் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் பயணித்து வருகின்றது.
வருகின்ற ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டப்படி தரையிறங்கி சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.