இந்தியா

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி!

DIN


பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இறக்கும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டரி பகுதி அமைந்துள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக உள்ளது. 

சுதந்திரநாளையொட்டி கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்பார்கள். 

அங்கு பாரம்பரிய முறைப்படி தேசியக்கொடிக்கு மரியாதை அளித்து கொடியிறக்கப்படும். அதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான இரும்புக் கதவு மூடப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT