மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை
மக்களவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!
இந்நிலையில் இன்று தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அனில் சௌத்ரி, அஜய் மேகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வியூகம், பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.