இந்தியா

எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா, ராகுல், கார்கே பங்கேற்பு!

மும்பையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

DIN


மும்பையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டது.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தியுள்ளன. முதல் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பங்கேற்பதை அக்கட்சி உறுதி செய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT