கர்நாடகத்தில் தக்காளி விலை கணிசமாகக் குறைந்துள்ளதையடுத்து ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை ரூ.140 ஆக இருந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்து வருவதால் தக்காளி விலை கிடுகிடுவெனச் சரிந்து கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது.
மைசூரு ஏபிஎம்சி யார்டில் தக்காளி விலை ஞாயிறன்று கணிசமாகக் குறைந்து கிலோவுக்கு ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மைசூரு ஏபிஎம்சி செயலர் எம்.ஆர்.குமாரசாமி கூறுகையில்,
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருள்களின் வரத்து இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மேம்பட்டுள்ளது. இதுவே விலை சரிவுக்கு முக்கிக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் மைசூரு ஏபிஎம்சியில் மொத்த விலையில் தக்காளியின் அதிகபட்ச விலை கிலோ ரூ.140 ஆக விற்கப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.