முகப்பு
இந்தியா

மணிப்பூரில் நான்கு பயங்கரவாதிகள் கைது!

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
பகிர்:

மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போலீஸார் குழுக்கள், ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில்
இம்பால் கிழக்கு மற்றும் விஷ்ணுபூர் மாவட்டங்களில் நான்கு பயங்கரவாதிகளை கைது செய்தனர். 

இந்த நடவடிக்கையின்போது அவர்களிடம் இருந்த ஆறு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் மற்றும் இரண்டு வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளனர். 

ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலை 37 (இம்பால்-சில்சார் சாலை) வழியாக வாகனங்களின் இயக்கம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும், முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, விதிமீறல்களுக்காக இதுவரை 2,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →