இந்தியா

ஓணம் பண்டிகை: கேரளத்தில் மது விற்பனை புதிய சாதனை

DIN

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தில் 9 நாள்களில் ரூ.665 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.41 கோடி அதிகம் என்று கூறப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலத்தில் திங்கள்கிழமை உத்ரடோம் தினம் வரை 9 நாள்களில் விற்பனையான மதுபானங்களின் மதிப்பு ரூ.665 கோடி. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு விற்பனையான மதுபானங்களின் மதிப்பு ரூ.624 கோடியாகும். எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் 41 கோடி ரூபாய் அதிகம் விற்பனையாகியிருக்கிறது.

நாடு முழுவதும் இருக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் கடந்த செவ்வாயன்று ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதில் திங்கள்கிழமை மட்டும் கேரள மாநில மதுபானக் கடைகள் மூலம் ரூ.116.1 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்த ஆண்டு ரூ.112 கோடியாக இருந்தது.

இது புதன்கிழமை வரை ரூ.770 கோடி அளவுக்குத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டு ரூ.700.6 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT