இந்தியா

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா கிராமத்தில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

DIN

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அரிஹால் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்ததாக ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் சீனார் கார்ப்ஸ், அதன் எக்ஸ் சமூக வலைதள பதிவில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அரிஹால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, வியாழக்கிழமை இரவு ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரின் கூட்டாக அரிஹால் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் குவியல் குவியலாக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை சுற்றிவலைத்து மீட்ட போது அங்கிருந்த பயங்கரவாதி வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதையடுத்து வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில்  பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அந்த பகுதியில் ராணுவம் வீரர்ரகள் மற்றும் காவல்துறையினரின் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

SCROLL FOR NEXT