இத்தாலி பிரதமருடன் மோடி | X (Twitter) 
இந்தியா

வைரல் செல்ஃபி: மோடியின் பதிவு!

இத்தாலி பிரதமருடன் மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

DIN

இத்தாலியன் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலானதைத் தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்டுள்ளார் மோடி.

துபையில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட மோடி இத்தாலி பிரதமர் உடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜியார்ஜியா,  ‘காப்28-ல் நல்ல நண்பர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இருவரின் பெயரையும் இணைத்து ‘மெலோடி’ என்கிற ஹேஷ்டேக்கும் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், ஜியார்ஜியாவின் பதிவைப் பகிர்ந்த மோடி,  “நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்வளிக்கக் கூடியது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு(காப்28) துபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மோடி, இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

SCROLL FOR NEXT