4 மாநிலத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, 4 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுவதால், தற்போதைய தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னிலை நிலவரம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தெரியவரும்.
இந்த நிலையில், 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதையும் படிக்க: வாக்கு எண்ணும் மையங்கள் தயார்!
தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.