இந்தியா

தில்லி கலால் கொள்கை: பினோய் பாபுவுக்கு ஜாமீன்!

DIN

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மதுபான நிறுவனமான பெர்னாட் ரிக்கார்டின் நிர்வாகி பினோய் பாபுவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிச.8) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்ட பினோய் பாபு 13 மாதங்களுக்கு மேலாக காவலில் இருப்பதாகவும், அவருக்கு எதிரான விசாரணை இன்னும் இந்த வழக்கில் தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டது. 

பாபு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்த வழக்கில் முரண்பாடுகள் இருப்பதாகவும் பெஞ்ச் குறிப்பிட்டது. விசாரணைக்காக நீண்ட நாள் சிறைக்குள் வைத்திருக்க முடியாது. இது முறையல்ல என்றும் குறிப்பிட்டது. 

இந்த வழக்கில் சிபிஐ குற்றஞ்சாட்டுவதற்கும், அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டுவதற்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகிறது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் பெஞ்ச் கூறியது.

இந்த நிலையில், விசாரணை தொடங்காமல் அமலாக்கத்துறை யாரையும் நீண்ட காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று ராஜுவிடம் கூறிய நீதிபதி கண்ணா, இந்த வழக்கில் பினோய் பாபுவை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
 
பாபு மற்றும் நாயர் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

SCROLL FOR NEXT