முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் பிஎஸ்எப் வீரர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 நக்சல்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 16 டிசம்பர் 2023, 4:40 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் பிஎஸ்எப் வீரர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 நக்சல்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று காலை பாரத்தபூரில் உள்ள வனப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் முகுந்த் நர்வாஸ் (45), ஜக்கு ராம் அஞ்சலா (45), அர்ஜுன் பொடாய் (26), தஸ்ரத் துக்கா (35) என அடையாளம் காணப்பட்டனர்.

Advertisement

Advertisement

பார்த்தபூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அனைவரும் மாவோயிஸ்டுகளின் கூட்டாளிகள் ஆவார். 

டிசம்பர் 14-ம் தேதி பிஎஸ்எப் தலைமைக் காவலர் அகிலேஷ் குமார் ராய்(45) குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர், மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments