தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் 
இந்தியா

தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிச.22-ஆம் தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ஆம் தேதி லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

ஆனால், தேஜஸ்வி யாதவ் டிச.22-ம் தேதி ஆஜராகாத நிலையில், ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT