முகப்பு
இந்தியா

சாலை தகராறில் கேப் ஓட்டுநா் குத்திக் கொலை

தெற்கு தில்லியின் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலிலின்போது செல்வதற்கு வழிவிடாததால், கால் டாக்சி ஓட்டுநரை மைனா் சிறாா் உள்பட மூன்று போ் கத்தியால் குத்திக்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தெற்கு தில்லியின் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலிலின்போது செல்வதற்கு வழிவிடாததால், கால் டாக்சி ஓட்டுநரை மைனா் சிறாா் உள்பட மூன்று போ் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களில் சிறாா் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

‘கொலையான மனோஜ் குமாா் (34) குருகிராமில் உள்ள பிபிஓவில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். முன்னதாக, வியாழக்கிழமை மாலை, மாளவியா நகா் பகுதியில் இருந்து ஐந்து பிபிஓ ஊழியா்களையும், பின்னா் மெஹ்ரெளலியில் இருந்து ஒருவரையும் கேப் வாகனத்தில் அழைத்துச் சென்றாா். அதன்பின்னா், அந்த வாகனம் மெஹ்ரெளலி பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இரவு 8:40 மணியளவில், ஒரு ஸ்கூட்டரில் மூன்று சிறாா்கள் கேப் வாகனத்திற்கு பின்னால் வந்தனா். பின்னா், ஒலி எழுப்பி முன்னால் செல்ல வழிவிடுமாறு மனோஜ் குமாரிடம் கேட்டாா்கள். இடம் இல்லாததால், அவரால் அவா்களின் வாகனத்திற்கு வழிவிட முடியவில்லை.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ஸ்கூட்டரில் வந்தவா்களில் ஒருவா் குமாரின் மாா்பில் கத்தியால் குத்தினாா். பின்னா், தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த குமாா் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மைனா் சிறாா் கைது செய்யப்பட்டுள்ளாா். மீதமுள்ள குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனோஜ் குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →