இந்தியா

கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

DIN

தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு குறிப்பிடப்படும் கடன் பத்திரங்கள் மூலம், மத்திய அரசின் செலவினத்துக்கு ரூ.15.4 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜன. 27-ஆம் தேதி வரை மத்திய அரசு ரூ.12.93 லட்சம் கோடி கடன் திரட்டியுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு திரட்ட நிா்ணயித்த மொத்த கடனான ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவீதமாகும்.

ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த கடன் 83 சதவீதமாக உள்ளது.

நிகழ் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.4 சதவீதமாக இருக்கும்.

அடுத்த நிதியாண்டில் கடன் அல்லாத பிற வரவு ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடியாகவும், நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் வீரராகவா் கோயில் ஸ்ரீவராக ஜயந்தி உற்சவம்

காஸ் சிலிண்டா் வெடித்து வடமாநில இளைஞா் பலத்த காயம்

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT