சிறையில் சாப்பிட ஆசையா? உணவகமே வந்துவிட்டது 
இந்தியா

சிறையில் சாப்பிட ஆசையா? உணவகமே வந்துவிட்டது

பொதுவாக யாருக்கும் சிறைக்குச் செல்ல பிடிக்கவே பிடிக்காத. ஆனால், அந்த சிறைச்சாலையே மாதிரியாக வைத்து பலரையும் ஈர்த்து வருகிறது ஒரு உணவகம்.

DIN


பாட்னா: பொதுவாக யாருக்கும் சிறைக்குச் செல்ல பிடிக்கவே பிடிக்காத. ஆனால், அந்த சிறைச்சாலையே மாதிரியாக வைத்து பலரையும் ஈர்த்து வருகிறது ஒரு உணவகம்.

பிகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு உணவகம் சிறைச்சாலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒன்றல்ல.. இரண்டல்ல.. வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு காரணமாக காளான்கள் போல பிகாரில் இந்த சிறை உணவகம் முளைத்துவிட்டன.

ஒரு மிகப்பெரிய உணவகம், சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள். அந்த அறைக்குள் உணவருந்தும் மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, உணவருந்த வருபவர்களுக்கு கையில் விலங்கும் போடப்படுகிறது.

இதுபோன்ற உணவங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். ஜெயிலுக்குப் போக பிடிக்காதுதான். ஆனால், இந்த உணவகத்துக்குச் சென்று வித்தியாசமான சூழலில் உணவருந்திவிட்டு வருவது அதுவும் குடும்பத்தோடு என்றால் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சில உணவகங்களில், உணவுப் பரிமாறுபவர்களுக்கு சிறைக் கைதிகளுக்கான ஆடையை வழங்கியிருக்கிறது. இங்கு எந்த குற்றமும் செய்யாமல் உள்ளே வரலாம். விரும்பிய உணவை சுவைக்கலாம். பணத்தைக் கட்டிவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள் சிரித்தபடி.

பலரும் புகைப்படம் எடுப்பதற்காகவே வருகிறார்கள். வயிறு நிரம்புகிறதோ இல்லை, செல்லிடப்பேசியில் கேலரி நிரம்பி விடுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாரம்பரிய சுற்றுலா பயணம்

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

SCROLL FOR NEXT