இந்தியா

ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்! பாஜக

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, தொழிலதிபர் அதானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியவுடன் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது:

பாஜக குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் காந்தி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். ராகுல் காந்தி பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT